திருவள்ளுவர்
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.
திருவள்ளுவருக்கு பல சிறப்பு உள்ளன. அவைகளிள் சில:
- தேவர்
- நாயனார்
- தெய்வப் புலவர்
- செந்நாப்போதர்
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
- பொய்யாமொழிப் புலவர்
- மாதானுபங்கி.
திருவள்ளுவரைப் பாரட்டி பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.
இவரை,
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என பாரதியாரும்,
"வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே"
என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
Comments
Post a Comment