Featured
- Get link
- X
- Other Apps
பெரிய புராணம் காப்பியப் பகுப்பு
பெரிய புராணம்
காப்பியப் பகுப்பு
பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.
காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று, சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் முடிகிறது.
முதற் காண்டத்தில்,
- திருமலைச் சருக்கம்,
- தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
- இலை மலிந்த சருக்கம்,
- மும்மையால் உலகாண்ட சருக்கம்,
- திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,
இரண்டாம் காண்டத்தில்
- வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
- வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
- பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
- கறைக்கண்டன் சருக்கம்,
- கடல்சூழ்ந்த சருக்கம்,
- பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
- மன்னிய சீர்ச் சருக்கம்,
- வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8 சருக்கங்களும் அமைந்துள்ளன.
13 சருக்கங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் அவற்றில் பேசப்படும் சிவனடியார்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
சருக்கு.எண் பாடல்கள் அடியார்கள்
- 349 -
- 201 7
- 422 7
- 298 6
- 633 7
- 1734 6
- 303 5
- 115 8
- 41 5
- 47 5
- 24 7
- 58 7
- 53 1.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment