Skip to main content

Featured

சிலப்பதிகாரம் முன்னுரை

                                 சிலப்பதிகாரம்


                  பழந்தமிழில் நூல்கள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டன. தொடர்நிலைச் செய்யுள் வடிவில் செய்யப்பட்டது காப்பியம் எனப்பட்டது. தமிழ் மொழியில் ஐந்து பெருங்காப்பியங்களும் ஐந்து சிறு காப்பியங்களும் உள்ளன. இவை தவிர வேறு சில காப்பியங்களும் உள்ளன. ஐம்பெருங் காப்பியங்களுள் முதல் பெருங்காப்பியமாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம் ஆகும். அதில் ஒரு சிறுபகுதி வழக்குரை காதை என்பது. இந்தப் பகுதி மூலம் காப்பியத் தலைவி கண்ணகி, தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என நிறுவியதையும் அதன்வழி முப்பெரும் உண்மைகளுள் இரண்டு உணர்த்தப்படுவதையும் இங்கு காணலாம்.

                தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் ஆவார். இது சமண சமயக் காப்பியம். இந்தக் காப்பியம் சங்க காலத்திற்கும் தேவாரக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்து, குலவொழுக்கப்படி திருமணம் செய்து, இல்லறம் நடத்திய கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாற்றை விளக்குவது இந்நூல். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மூன்று காண்டங்களில் முப்பது காதைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

                தமிழ் மொழியில் தோன்றிய முதல் பெருங்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலின் ஆசிரியர் இளங்கோ அடிகள் ஆவார். இது சமண சமயக் காப்பியம். இந்தக் காப்பியம் சங்க காலத்திற்கும் தேவாரக் காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்து, குலவொழுக்கப்படி திருமணம் செய்து, இல்லறம் நடத்திய கோவலன் கண்ணகி வாழ்க்கை வரலாற்றை விளக்குவது இந்நூல். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மூன்று காண்டங்களில் முப்பது காதைகளில் விரிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

               

                  


Comments